பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…!
பல்வேறான படுக்கைகள் உள்ளன . எவ்வாறான படுக்கையில் படுத்து உறங்கினால் எவ்வாறான பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவு கோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் – உடல் சூட்டை குறைக்கும், சுரம் போக்கும், , மந்தம், உடலுக்குக் குளிர்ச்சியும், நல்ல உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் – சீதபேதி ஆவதை தடுக்கும் , சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் – வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் – உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் – வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் – வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம் பஞ்சு படுக்கை – தலை முதல் பாதம் வரையில் ஏற்படும் அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும். உடலில் ரத்தம், தாது பலம் பெறும்.
மலர்ப்படுக்கை – ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம் – நஞ்சுகளினால் ஏற்படும் நோய்களின் பாதிப்பால் இருந்து நீக்கும்.
இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய் :
பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.
மூங்கிலின் நார் பாய், வீடு மற்றும் அலுவலகங்களில் தடுப்புசுவர் போலவும் ,மற்றும் கோடை வெப்பத்தை தடுக்கும் அரணாகவும் பயன்படும்.
நாணல் கோரை பாய் எளிய மக்கள் பயன்படுத்தும் ஒரு நல்ல படுக்கை விரிப்பாகும்.