இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தை திருவிழா..!!
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தை மாத கடைசி வெள்ளி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சாமி தரிசனம்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் சித்திரை, ஆடி, தை, பங்குனி உள்ளிட்ட மாதங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வர்.
மேலும் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரையாக கூட்டம் கூட்டமாக நடந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.
இந்த நிலையில் தை மாத கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது பால் பன்னீர் ஜவ்வாது தேன் இளநீர் தயிர் விபூதி குங்குமம் உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனை வேண்டி , அக்கினிச்சட்டி, மாவிளக்கு பறக்கும்காவடி, தேர்இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி கோவில் செயல் அலுவலர் இளங்கோ மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..