சிறுமியின் மீதான காதல்.. கம்பி எண்ணும் காதலன்..!
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் தவசிமுத்து இவருக்கு உதயகுமார் (22) என்ற மகன் இருக்கிறார்.
உதயகுமார் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதனால் அவர்கள் கடந்த மாதம் கும்பகோணத்தைச் சேர்ந்த ரஞ்சித் (24) என்பவருடன் அவசரஅவசரமாக சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் திருமணத்திற்கு பிறகும் சிறுமி தன் காதலை மறக்க முடியாமல் தவித்துள்ளார். இதனால் தன் காதலன் உதயகுமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
இதனால் சிறுமியின் காதலன் உதயகுமார் கடந்த 9-ம் தேதி இரவு சிறுமியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று சிறுமியை அழைத்து தனது வீட்டிற்கு சென்று விட்டார்.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரியின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரஞ்சித் மற்றும் உதயகுமார் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மேலும் சிறுமியின் பெற்றோர் மற்றும் ரஞ்சித்தின் பெற்றோரையும் போலீசார் திவிரமாக தேடி வருகின்றனர்.
-பவானிகார்த்திக்