பெண்ணால் பரபரப்பான மயிலாடுதுறை..!! மாவட்ட ஆட்சியரின் அடுத்த கட்ட முடிவு..?
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாலங்காடு மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் டயானா. கும்பகோணம் முதல் சீர்காழி வரையில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவரது வீடு நெடுஞ்சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ள நிலையில் இதில் புதிதாக பேருந்து நிறுத்தத்தை இவரது வீட்டின் அருகிலேயே அமைத்துள்ளனர். காலியாக உள்ள பகுதியில் அமைக்க கோரியும், வீட்டின் அருகில் பேருந்து நிறுத்தம் அமைந்தால் டாஸ்மார்க் குடிகாரர்கள் கூடாரம் ஆகிவிடும் என்று கூறி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் நிவேதா என்பவரிடம் மனு அளித்துள்ளார்.
இதற்கு உதவி பொறியாளருக்கு நிவேதா மறுப்பு தெரிவித்து அதே இடத்தில் பேருந்து நிறுத்தத்தை அமைத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மூன்று முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த டயானா இன்று வீட்டில் தற்கொலை செய்து கொள்வதற்காக எலிமருந்தை குடித்துவிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் நேரில் மனு அளிக்க வந்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷமருந்திய டயானா மயங்கி விழுந்துள்ளார். மேலும் தன் தற்கொலைக்கு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நிவேதா தான் காரணம் என்று ஆடியோ மெசேஜ் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அரசு வாகனத்தில் ஏற்றி அவசரமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..