தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளது என்று பெங்களூர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி, உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள இருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றார்.
இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் அமைச்சர் உடல்நிலைக் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பெங்களூரு நாராயண இருதாலயா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.