கால்நடை பராமரிப்பு துறை சார்பான புதிய 12 அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
கால்நடைகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன்களை அதிகரிப்பதற்காக துறை சார்ந்த பண்ணைகளில் உயர் மரபுத்திரன் கொண்ட புதிய கால்நடைகளை அறிமுகம் செய்யும் பொருட்கள் இரண்டு கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
தீவன வீரியத்தை குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் 3000 புல் நறுக்கும் கருவிகள் 4 கோடியே 96 லட்சம் செலவில் வழங்கப்படும்.
சுய உதவிக் குழுவினருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி 25 ஏக்கர் மெய்க்கால் நிலங்களில் இரண்டு கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் அதிக மகசூல் தரும் பசுத்தீவன புல்வகைகள் உற்பத்தி செய்யப்படும்.
நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் ஒரு அலகு) 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் 50% மானியத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கான இணைய முகப்பு 87 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
உள்நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் சென்னையில் 5 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் விரிவாக்கப்படும்.
ஊராட்சி ஒன்றிய தலைமை இட கால்நடை மருத்துவ நிலையங்களில் நோய் கண்டறியும் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 20 கோடி ரூபாய் செலவில் 50 கையடக்க நுண்ணலை நுண்ணாய்வு மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சு கருவிகள் வழங்கப்படும்.
அனைத்து கால்நடைகளுக்கும் நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் மூலம் கிராமங்கள் தோறும் கால்நடைகளை காக்க உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 73 ஆயிரத்து 500 முகங்கள் நடத்தப்படும்.
பால் உற்பத்தியை பெருக்குவதற்காக பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகளை பயன்படுத்தி அதிக கிடேரிக் கன்றுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
5 பண்ணைகளில் பிரிக்கப்படாத 220 ஏக்கர் நிலப்பரப்பில் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பின் மூலம் அதிக மகசூல் தரும் பசு தீவனங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
ஐந்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் 20 கால்நடை மருந்தகங்களுக்கு பதினாறு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
நான்கு துறை சார்ந்த பண்ணைகளில் புதிதாக விவசாயிகள் தகவல் மையம் மற்றும் மாதிரி செயல் விளக்க ஒருங்கிணைந்த பண்ணை கண்காணிப்பு அலுவலகங்கள் பதினாறு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.