புதிய பேருந்து சேவை தொடக்கம்..!! டிக்கெட் கிடையாது பாஸ் இருக்கு…!!
திருவாரூரில் இருந்து பாண்டிச்சேரி வழியாக புதிய பேருந்து சேவையை திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் ஆன பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். பேருந்தில் ஏறிய பூண்டி கலைவாணனிடம் பயணச்சீட்டு கேட்ட நடத்துநரிடம் இலவச பஸ் பாஸ் உள்ளது என பஸ் பாஸை எடுத்துக்காட்டி அசத்தல் .
திருவாரூர் பேருந்து நிலையத்தில் சென்னைக்கு பாண்டிச்சேரி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார்.. அப்போது அவரிடம் பேருந்து நடத்துனர் பயணத்திற்கு 300 ரூபாய் கொடுங்கள் என கேட்டார் அப்போது எனக்கு இலவச பஸ் பாஸ் உள்ளது என எடுத்துக்காட்டி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து அதிகே இருந்த திமுக நகர செயலாளர் பிரகாஷ் நடத்துநரிடம் பணத்தை கொடுத்து சிரித்துக்கொண்டே பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ராஜா மண்டல மேலாளர் சிதம்பர குமார் கிளை மேலாளர் சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..