“நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது…” டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படமால் இருக்கும் நிதியை கேட்டும் மெட்ரோ இரயில் திட்டம் குறித்தும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
மத்திய பாஜக அரசானது தமிழ்நாட்டிற்கு மட்டும் நிதியை கொடுக்காமல் இருக்கிறது., அதாவது “நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது” என்ற நோக்கத்துடன் வஞ்சிக்கும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது., பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் பாஜக மேற்கொள்ளவில்லை என தமிழக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது..
அதற்கேற்றது போல ஒன்றிய அரசும் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயரே இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது., இந்த பட்ஜெட் பட்டியலில் தமிழ்நாடு உட்பட பாஜக அரசு வெற்றி பெறாத மாநிலங்களுக்கு பாஜக அரசு பட்ஜெட் பட்டியலில் பெயரை சேர்க்கவில்லை., அதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக., காங்கிரஸ்., மதிமுக., விசிக உட்பட பல்வேறு கட்சிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.
குறிப்பாக, சென்னையில் மெட்ரோ இரயில் திட்டமானது 2ம் கட்ட திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது., அந்த திட்டத்தை செயல்படுத்தி முடிக்க நிதி ஒதுக்கீடு செய்யும் படி ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு பலமுறை கோரிக்கை வைத்தது.. இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்தது.. அதேபோல், புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்காக அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியையும் ஒதுக்கீடு செய்யாமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமின்றி சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்காக மத்திய அரசு பங்கு அளிப்பதாக தெரிவித்திருந்தது.., ஆனால் அதற்கான பங்கு நிதியை கூட பாஜக அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி தற்போது வரை கிடைக்காமல் இருப்பதால்., அமெரிக்கா சுற்று பயணங்கள் முடித்து சென்னை திரும்பியதும் இந்த பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டு., தீர்வு காணப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் முன் அறிவித்திருந்தார்..,
அதன்படி கடந்த செப்டம்பர் 14ம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாக பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, வரும் 26ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதனையடுத்து, பிரதமர் மோடியை செப்டம்பர் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படலாம். இந்த பயணத்தின் போது, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களையும் முதல்வர் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..