“காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு…” குற்றவாளி அதிரடி கைது…!!
பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய இருவருக்கு 18 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் நேற்றுமுந்தினம் நள்ளிரவு நேரத்தில் சிப்காட் காவல் நிலைய வளாகத்தில் முகமூடியுடன் நுழைந்த இரு நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். அதே போல சிப்காட் வ.உ.சி.நகரில் உள்ள அரிசிகடை ஒன்றின் வாசலிலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால், கடையின் முன்பகுதி கருகி லேசான சேதமடைந்தது.
இரு வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, சிப்காட் காவல் நிலையத்தை நள்ளிரவு நேரில் ஆய்வு செய்தார். மேலும் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பெட்ரோல் குண்டு வீசுவதற்காக முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களை பிடிக்க எஸ்.பி.தலைமையில், 2 ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி ஆகியோர் அடங்கிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் சிசிடிவி காட்களின் அடிப்படையில் விசாரணை நடத்தியதோடு, சென்னை, காஞ்சிபுரம், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
முதற்கட்டமாக சிப்காட் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தமிழரசன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தீவிரப்படுத்தியதில் பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்ட தமிழரசனின் மகன் ஹரி சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னை சென்று ஹரியை பிடித்ததோடு ராணிப்பேட்டைக்கு அழைத்து வந்தனர். அவ்வாறு வரும் வழியில் வாலாஜா டோல்கேட் அடுத்த வாணி சத்திரம் பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக போலீஸ் வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.
காரை விட்டு கீழே இறங்கிய போது திடீரென ஹரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எஸ்.ஐ.முத்தீஸ்வரன், எஸ்.எஸ்.ஐ. கண்ணன் ஆகியோரை தாக்கியுள்ளார். இதனைக் கண்ட இன்ஸ்பெக்டர் சசிகுமார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து ஹரியின் இடதுகால் முட்டிக்கு கீழே துப்பாக்கியால் சுட்டார்.
முதல் முறை தவறிய நிலையில் இரண்டாவது முறையாக சுட்டு பிடித்தார்.ஹரி தாக்கியதில் காயமடைந்த எஸ்.ஐ.முத்தீஸ்வரன், எஸ். எஸ் .ஐ. கண்ணன் துப்பாக்கியால் சுடப்பட்டதில் இடது கால் முட்டியில் குண்டுடன் கீழே விழுந்த ஹரி ஆகிய இருவரை போலீசார் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஹரிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் வரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்த எஸ்.பி. துப்பாக்கியால் சுடப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த விசாரணையின் இறுதியில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மூன்று பேருக்கு மட்டும் தொடர்பு உள்ளதா அல்லது மேலும் சிலர் சம்பந்தப்பட்டுள்ளனரா என விசாரணையை தொடர்ந்தனர்.
இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய விஷால், பரத் ஆகிய இருவர் சென்னையில் கைது செய்ப்பட்டனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஹரி இடம் நடத்திய விசாரணை தன் மீதும் தன் தந்தையான சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன் மீதும் தனது கூட்டாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரத்தில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக ஹரி கூறியதாக ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹரியிடம் சிறார் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நீதிமன்காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கில் கைது செய்யப்பட்ட பரத் மற்றும் விஷால் ஆகிய இருவரும் ராணிப்பேட்டை முதன்மை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.
இரண்டு பேரையும் விசாரித்த நீதிபதி இருவரையும் 18 நாட்கள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கில் முக்கிய குற்றவாளி தமிழரசனை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரி என்ற வாலிபரை போலீசாரல் சுட்டுப் பிடித்த நிலையில் மேலும் பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய ஹரியின் கூட்டாளியான சிப்காட் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பரத் மற்றும் விஷால் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக வாலாஜா மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..