சென்னை மெட்ரோ ரயில் எடுத்த அந்த முடிவு.. வரலாற்று சாதனையில் மெட்ரோ..!
சென்னையில் மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சம் பேர் மக்கள் பயணம் செய்து இருக்கிறார்கள். இதற்கு முன் இல்லாத அளவிற்கு வரலாறு காணமுடியாத அளவில் அதிகமான மக்கள் நேற்று பயணம் செய்துள்ளனர். விமான சாகசத்தை காண வந்த மக்கள் திரும்பி செல்லும்போது கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது ஆனால் மெட்ரோ ரயில்கள் 3.5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டதின் மூலமாக கடுமையான கூட்ட நெரிசல் குறைந்தது.
இந்திய விமான படையின் 92 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 72 விமானங்களில் விமான வீரர்கள் பல சாகசங்களை செய்து மக்களை அசத்திடாங்க. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்டனர். இந்நிகழ்ச்சியில் தான் உலகிலேயே அதிக அளவில் மக்கள் திரண்ட இராணுவ நிகழ்ச்சி என்ற சாதனையை சென்னை விமான சாகச நிகழ்ச்சி நிகழ்த்தியது.
சென்னையில் விமான சாகச நிகழ்வானது பகல் 1 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறிய நிலையில் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமானது கடுமையான கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
நேற்று கடுமையான கூட்ட நெரிசலால் பயணிகள் டிக்கட் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நெட்வொர்க் ஜாம் ஆகி டிக்கெட் ஸ்கேனிங் எந்திரம் செயல்படாமல் போனது, இதனால் கூட்டத்தை சமாளிக்க சென்னை மெட்ரோ ரயில் இயக்கமானது, டிக்கெட் ஸ்கேன் செய்தால் திறக்கும் தாளியங்கி கதவுகலை அகற்றி மக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் மேற்கொண்டனர்.
பொதுவாக வழக்கமான ஞாயிற்று கிழமைகளில் 1.70 லட்சம் பேர் பயணிக்கும் நிலையில் நேற்று 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மெட்ரோ பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சென்ற மாதம் செப்டம்பர் 6 ஆம் தேதி விநாயகர் சதிர்த்தி நாள் விடுமுறையை முன்னிட்டு ஒரே நாளில் 3,74,000 பேர் பயணித்து இருக்கிறார்கள் இதுவே அதிகமான பயணிகள் பயணித்த நிலையில் இருக்கும்போது தற்போது ஒரே நாளில் 4 லட்சம் பயணிகள் ஒரே நாளில் பயணித்து அதையும் முறியடித்து இருக்கிறார்கள்.