சரும பராமரிப்பில் அன்னாசி..!!
எல்லாம் சீசன்களிலும் கிடைக்க கூடிய பழங்களில் அன்னாசியும் ஒன்று. அதில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் அளிக்கிறது.
வாரத்திற்கு ஒரு முறை அன்னாசி ஜூஸ் எடுத்துக் கொண்டால் வெயிலின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். முகம் என்றும் பொலிவுடன் இருக்கும்.
* முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அன்னாசி பழத்துண்டுகளை தேய்த்து வந்தால்.., முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
* உடலை நீரேற்றத்துடன் வைப்பதால், சருமம் என்றும் பளபளப்புடனும்.., முகம் சுருங்காமலும் இருக்க வைக்கிறது, இதனால் வயதான தோற்றம் வராமல் பாதுகாக்கிறது.
* அன்னாசி பழத்தை மசித்து, பப்பாளி மற்றும் தேன் கலந்து பேஸ் பேக்காக பயன் படுத்தலாம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
* அன்னாசி பழத்துடன் சிறிதளவு, தேங்காய் பால் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் பளபளப்பாக இருப்பதை உணரலாம்..
* அன்னாசி பழச்சாற்றில் சிறிதளவு தயிர் சேர்த்து.., தலையில் தடவி 20 நிமிடம் கழித்து குளிரிந்த நீரில் முகம் கழுவ வேண்டும்.., இதனால் வலுவான மற்றும் மிருதுவான கூந்தல் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..,
-வெ.லோகேஸ்வரி