ஊத்தங்கரை தனியார் விடுதியில் ஆண் சடலம் போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சேலம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சுப்பிரமணியம் லாட்ஜ்ல் அறை எண் 310ல் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் மகன் முருகன் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருவதாகவும் கடந்து பத்து நாட்களாக அரை வாடகைக்கு எடுத்து தங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்க்கும்போது கட்டிலுக்கு கீழே விழுந்து கிடந்துள்ளார் அதனைக் கண்டு ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் அவரது அறையின் வெளி பகுதியில் மருந்து பாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊத்தங்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்