கேரளா வீட்டு சக்க கூட்டு கறி செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
பலாப்பழம் (சக்கை/பழப்பழம்) – 1 கோப்பை
காரமணி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 3/4 கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 1 எண்
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு விதைகள் – 1 தேக்கரண்டி
உளுந்து பருப்பு (உளுத்தம் பருப்பு) – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2 எண்
கறிவேப்பிலை – தேவையான அளவு
துருவிய தேங்காய் – 1/2 கப்
செய்முறை:
ADVERTISEMENT
ஒரு பாத்திரத்தில் காராமணியை கொட்டி ஒரு 15 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
பின் பாலாப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில் ஊறவைத்த காராமணியை கொட்டி 3 விசில் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அடி கனமான பாத்திர்த்தை அடுப்பில் வைத்து நறுக்கிய பலாப்பழம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு ஒரு 8 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் தேங்காய், சிவப்பு மிளகாய் மற்றும் சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வேகவைத்திருக்கும் பாத்திரத்தில் , வேகவைத்த காராமணியை சேர்த்து கிளறி விடவும்.
பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கிளறி விடவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொறிந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு பொறிந்ததும், வேகவைத்த பயரில் கொட்டி கிளறவும்.
தேங்காயை ஒரு வாணலில் போட்டு பொன்னிறமாக வறுத்து அந்த கலவையில் சேர்க்கவும்
அனைத்தையும் கிளறி இறக்கினால் கேரள வீட்டு சக்க கூட்டு கறி தயார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.