சாலையில் தேங்கிய கழிவு நீர்.. அகற்ற கோரி பொது மக்கள் போராட்டம்..!
சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை, மன்னார்சாமி தெரு பகுதியில் சாலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நின்றதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று டிகாஸ்டர் சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் பல்வேறு கோரிக்களை முன் வத்தனர். சமீபத்தில் இப்பகுதியில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாயில் தண்ணீர் செல்ல போதிய வழியில்லை எனவும் சாலை தாழ்வாக இருப்பதால் சுற்றுவட்டார பகுதி தண்ணீர் முழுதும்,சாலையில் தேங்குகிறது. இனி வருவது மழைக்காலம் என்பதால் உடனே மழைநீர் கால்வாயில் தண்ணீர் சரியாக வெளியே செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.
சாலையை புதிதாக போட வேண்டும் என்று கூறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார், போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்களிடம் பேச்சு நடத்தினர். பின்னர் கழிவு நீரகற்று லாரியை வரவழைத்து, கழிவுநீரை அப்புறப்படுத்தினர். இந்த போரட்டதினால் அப்பகுதியில் சிரிது நேரம் பரபரப்பு சூழல் ஏற்ப்பட்டது.
-பவானி கார்த்திக்