எம்.பி தயாநிதி மாறன் தலைமையில் ரேக்ளா போட்டி..!!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாமுராய் பட்டியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த ரேக்ளா போட்டியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு அணி சார்பில் மாநிலம் தழுவிய ரேக்ளா போட்டிகள் நடந்தது போட்டியை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே ஈஸ்வர சாமி தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 200 மற்றும் முன்னூறுமீட்டர் பந்தய தூரங்களில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன வெற்றி பெற்ற காளை வண்டிகளுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பரிசுகள் வழங்கினார்..
நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்வழி செல்வராஜ் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் உடுமலை நகர கழக செயலாளர் வேலுச்சாமி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் ஒன்றிய செயலாளர்கள் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ருத்ரப்பன் நன்றி கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..