உடல் உஷ்ணத்தை குறைக்க எண்ணெய் குளியல்..!
நம் உடம்பில் சூடானது அதிகமாகும்போது அது நமது உள் உறுப்புகளுக்கு பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்காகத்தான் நம் முன்னோர்கள் எண்ணெய் குளியல் என்பதை வழக்கத்தில் வைத்து இருக்கிறார்கள்.
ஒரு வாரத்தில் நம் உடலுக்கு இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்து வருவதினால் உண்டாகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
நல்லெண்ணெயை உடலில் தேய்த்து கொஞ்ச நேரத்திற்கு ஊறவைத்து குளித்து வர உடலில் உயர் ரத்த அழுத்தம் சரியாகிறது.
தொடர்ந்து நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதினால் செரிமானத்தை சரிசெய்கிறது. உடலின் இனப்பெருக்க உறுப்புக்களின் அதிகமான உஷ்ணத்தை தணித்து ஆண்மை குறைபாட்டை குறைத்து உடலுக்கு வலிமையை அளிக்கிறது.
தலையில் இருக்கும் அதிகபடியான வெப்பம் காரணமாக தலைமுடி கொட்டுதல், வழுக்கை, இளநரை ஆகிய பிரச்சனைகள் உண்டாகிறது. இதனை தடுக்க தொடர்ந்து எண்ணெய் தேய்த்து குளித்து வரலாம்.
உடலில் திடீர் கவலை, மனச்சோர்வு, பயம், துக்கம், ஏமாற்றம், கோபம், விரக்தி ஆகிய உணர்வுகள் இருக்குமானால் அது உடலுக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்து குளிப்பதினால் குறைந்து சமநிலைக்கு வருகிறது.
எண்ணெய் தேய்த்து குளிப்பதினால் இன்சுலின், விந்து, கோழை, மாதவிடாய், வெள்ளைப்படுதல், எச்சில், உமிழ்நீர் ஆகியவற்றை சரியான நிலையில் வைத்து உடலை காக்கிறது.
சித்த மருத்துவத்தில் வாரம் இருமுறை அல்லது ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை குளித்தால் நன்மை என சொல்லப்படுகிறது.
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் குளிப்பது நன்மை அளிக்கும் என கூறுகிறார்கள்.