“அவள் உலக அழகியே… நெஞ்சில் விழுந்த அருவியே..”
தமிழ் சினிமாவில் இன்றும் இளமையுடன் இருக்க கூடிய நடிகைகள் யார் என்று பார்த்தால் பலர் நினைவிற்கு வருவார்கள்.. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அவரின் நடிப்பும் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரும் நினைவிற்கு வருவாங்க..
அப்படி பார்த்தால் “ஜானு” என்று சொன்னாலே நினைவிற்கு வருவது நடிகை “த்ரிஷா” மட்டுமே.., நடிகை த்ரிஷா இன்றுவரை இளமையுடன் இருக்க காரணம்.., என்ன நாம் திரையில் பார்த்த த்ரிஷா விற்கும். திரைக்கு பின் உள்ள த்ரிஷா பற்றி படிக்கலாம் வாங்க…
சினிமா மீது ஆர்வமுள்ள நடிகை த்ரிஷா தமிழில் முதன் முதலில் நடித்த படம் தான் “ஜோடி” ஆனால் இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து இருப்பார். அதன் பின் முதன் முதலில் ஹீரோயினாக நடித்த படம் தான் “மெளனம் பேசியதே”.. அதிலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு படம் ஹிட் கொடுக்கவில்லை என சொல்லலாம்..
இருந்தாலும் விடாமல் முயற்சி செய்து அபியும் நானும், லேசா லேசா, சாமி., திருப்பாச்சி, கில்லி., உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என பல படங்கள் வெற்றிப்படங்கள் என சொல்லலாம்., இந்த படங்களுக்கு பின் த்ரிஷாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என சொல்லலாம்.,
எத்தனை படங்கள் ஹிட் கொடுத்தாலும் ஒரு சில கதா பாத்திரங்கள் மட்டும் தான் ரசிகர்கள் மனதில் நீங்கள் இடம் பிடிக்கும்.. அப்படி த்ரிஷா என்றாலே பலருக்கும் நினைவில் வருவது ஜெர்ஸி அல்லது ஜானு..
இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் ஜானு தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள போஸ்ட்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..
மலை உச்சியில் பயணம் செய்பவர்கள் பாதி தம்மீது காதலிலும் பாதி மறதியிலும் இருப்பார்களாம்..
காதல், சிரிப்பு, தூக்கமின்மை, இரட்டை சந்தோஷத்துடன் சில நாட்கள் பயணம் என நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்…
இந்த புகைப்படங்களை விட தன்னிடம் SELFIE எடுக்க வந்த குட்டி ரசிகனை தன் மடி மீது வைத்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..