சருமத்தை சீராக்க இது ஒன்று போதும்..!
சருமத்தில் ஹைப்பர்பிக்மென்டேஷன் என்பது கருமையான திட்டுக்கள், புள்ளிகள் ஆகியவை இருப்பதாகும். சருமத்திற்கு நிறத்தை தரக்கூடிய மெலனின் என்ற நிறமி அந்த இடத்தில் அதிகமாக உற்பத்தி ஆவதே காரணமாகும். இந்த மெலனின் உற்பத்தியானது அதிக அளவில் சூரிய ஒளியில் படுவது, சாப்பிடும் சில வகை மருந்துகளால் மெலனின் உற்பத்தி அதிகரிக்கிறது. சிலருக்கு இது பரம்பரை பரம்பரையாகவும் வரலாம்.
சீனா, இந்தியா, கிரீஸ், எகிப்து, ஜப்பான், மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் கற்றாழையானது பல நூற்று ஆண்டுகளாக பயிரப்படும் ஒரு தாவரமாகும். கற்றாழையில் இருக்கும் வழுவழுப்பான ஜெல்லானது மருத்துவ தயாரிப்புகளில் பெரிதும் பயன்படுகிறது.
கற்றாழையில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றை பெற்றுள்ளது. கற்றாழையை பயன்படுத்தும்போது அதில் இருக்கும் பண்புகள் சருமத்தில் இருக்கும் கருமை திட்டுக்களை தடுக்க உதவியாக இருக்கிறது.
மேலும் கற்றாழையானது சருமத்திற்கு தேவையான நீரேற்றம் தரவும் உதவியாக இருக்கிறது. இது சருமத்தில் இருக்கும் கருமையான திட்டுக்களை மாற்றி சருமத்தில் இயற்கையான நிறத்தை தக்க வைக்க உதவுகிறது.
கற்றாழை ஜெல்லுடன் சம அளவில் எலுமிச்சை சாறு கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு காயவைத்து கழுவினால் சருமம் பழைய நிலைக்கு திரும்ப உதவியாக இருக்கிறது.
கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து கலந்து பாதிப்படைந்த இடத்தில் தடவி காயவிட்டு அலசினால் சருமத்தில் இருக்கும் பாதிப்புகள் மறையும்.
எனவே உங்களின் சருமத்தில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கற்றாழையை பயன்படுத்தி நலம் காணுங்கள்.