3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!! உண்மையை மறைத்த அங்கன்வாடி ஆசிரியர்..!! வேதனையில் பெற்றோர்..!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் உபகோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 24-ஆம் தேதி சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிறுமியின் சகோதரர் உறவுமுறை கொண்ட சிறுவனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், உண்மையான குற்றவாளியை மறைத்து பொய்யான தகவல் கொடுத்த அங்கன்வாடி ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சரிவர விசாரணை செய்யாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம நாட்டாமைகள் தலைமையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், குற்றச்சாட்டப்பட்ட சிறாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கு மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகார் மனுவில், சம்பவத்தன்று சிறுமியை வழக்கம்போல அழைத்துச் செல்லும் அங்கன்வாடி ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார். அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு, அங்கன்வாடி ஆசிரியர் வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் சென்று உனது தங்கையை காணவில்லை தேடிப் பார்க்க வேண்டும் என அழைத்துச் சென்று உள்ளார்.
அவரை அழைத்து சென்ற பிறகு அவரைத் தேட சொல்லி அங்கன்வாடி சுவர் அருகில் சத்தம் கேட்பதாக கூறி சிறுவனை பார்க்கச் சொல்லியுள்ளார். சிறுவன் சுவரின் மீது ஏறி பின்புறம் குதித்து பார்த்துவிட்டு எனது தங்கையை அடித்து காயப்படுத்தி உள்ளார்கள் என்று சொன்னவுடன், இரண்டு பேர் அந்த சிறுவனை பிடித்து கை மற்றும் கால்களை கட்டி நீதான் அடித்தாய் எனக் கூறி மரத்தில் கட்டி வைத்தார்கள் என்பது தெரிய வருகிறது. அந்த அங்கன்வாடி கட்டடம் அருகில் சட்டவிரோத நபர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த பிரச்னை குறித்து எங்கள் கிராம மக்களிடம் விசாரணை செய்யாமலும், எங்கள் மக்கள் கூறுவதையும் கேட்காமல் தன்னிச்சையாக காவல் துறையினர் உரிய விசாரணை செய்யாமல் அங்கன்வாடி ஆசிரியர் கொடுத்த பொய்யான தகவலின் அடிப்படையில் உண்மைக்கு புறம்பாக புகார் வாக்குமூலம் எழுதி அது சம்பந்தப்பட்ட எனக்கோ, என் மனைவிக்கோ எவ்வித விவரமும் சொல்லாமல் முதல் தகவல் அறிக்கையை அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி ஊழியரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் உள்ள விபரம் எனக்கு எதுவும் தெரியாது. எனது மகளுக்கு ஏற்பட்ட காயமானது யாரால் ஏற்பட்டது என்பதும் எனக்குத் தெரியாது. எனவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி இந்த மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயிலாடுதுறை அவர்களுக்கு முறைப்படி அனுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு சிறப்பு புலன் அதிகாரியை நியமித்து விசாரணை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்துள்ளனர்.
காவல்துறையினர் விளக்கம்: சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சிறுவனை சீர்காழி நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி சிறுவன் நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தன் அடிப்படையிலேயே சிறுவன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..