புதுக்கோட்டையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு
புதுக்கோட்டையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியல் சமூக மாணவன் பாலமுருகன் பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரில் ஒருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மீதமுள்ள நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் காயமடைந்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இந்தப் போராட்டத்தை தொடர்ந்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா சம்பவ இடத்திற்கு சென்று, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் கொடுத்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.