நள்ளிரவில் சம்பித்த பொது மக்கள்…!! மின்வாரியம் அதிரடி அறிவிப்பு…!!
சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்..
கடந்த மாதம் செப்டம்பர் 13ம் தேதி மணலி துணைமின்நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக திருவொற்றியூர்., கொருக்குப்பேட்டை., வியாசார்பாடி., கொடுங்கையூர்., கோடம்பாக்கம்., மந்தைவெளி., கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானதுடன்., கொளத்தூர் தொகுதியை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்..
சென்னை மாநகரமே நேற்று ஒரேநாளில் இருளில் சூழ்ந்து விட்டது என சொல்லலாம்., மணலி துணை மின்நிலையத்தில் நேற்று இரவு 1௦:3௦ மணிக்கு மேல் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் சென்னை மாநகரம் முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது..
அதேபோல் சென்னையில் கடந்த சில தினங்களாக மிதமான மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் நேற்று சென்னையின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.,
அதாவது சென்னையின் புறநகர் பகுதியிலும் அண்ணாசாலை., திருவான்மியூர்., தேனாம்பேட்டை., அம்பத்தூர்., மாதவரம் உள்ளிட்ட பகுதயில் நேற்று கனமழை பெய்ததில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்..
மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகள் :
திருவொற்றியூர்., கொருக்குப்பேட்டை., வியாசார்பாடி., கொடுங்கையூர்., கோடம்பாக்கம்., மயிலாப்பூர், மந்தைவெளி., கொளத்தூர்., திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம்,, தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, சூளைமேடு, மாதவரம், ராயபுரம் என பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளும் இருளில் மூழ்கின.
வீட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சார சேவை துண்டிகப்ட்டது மட்டுமின்றி., தெருக்களிலும் மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலைகளில் மட்டுமின்றி இரயில் நிலையங்களிலும் மின்சார சேவை துண்டிக்கப்பட்டதால் இரயில் சேவைகள் நிருதபட்டது..
சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாகியும் மின்சாரம் இயங்காததால்., மின்வாரியத்தை தொடர்பு கொண்டபோது பொதுமக்களின் அழைப்புகளை எடுக்காமல் நிராகரித்ததாலும் கோபமடைந்த பொதுமக்கள் மின் பகிர்மான கழக அலுவலகத்திற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
மின்கம்பிகள் ஒரு சில இடங்களில் முறிந்து விழுந்து இருப்பதால் அவை சரி செய்த பின்னர் விரைவில் மின்சார சேவை இயங்கும் என அதிகாரிகள் உறுதி அளித்த பின்னரே பொதுமக்கள் கலைந்து சென்றனர்..
திருவல்லிக்கேணி, சேப்பாகம், புளியந்தோப்பு, ஆர்.ஏ புரம், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் நகர்ப் பகுதிகளிலும், பூவிருந்தவல்லி, போரூர், மதுரவாயல், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகியுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..