பட்டப்பகலிலே அரங்கேறிய சம்பவம்..!! விவசாய பெண் வேதனை..!! போலீஸ் விசாரணை..!!
பெண் விவசாயின்இரு சக்கர வாகனத்திலிருந்து வந்த ரூ. 5 லட்சத்து 30 ஆயிரம் திருட்டு.
பட்ட பகலிலே வழிப்பறி செய்வது., கொள்ளையடிப்பது., திருடுவது என சகஜமாகிவிட்டது என்ற சூழல் இருக்கிறது., பணம்., நகை., வாகனம் போன்றவை திருட்டு போயி கொண்டிருந்த நிலையில் தற்போது திருவண்ணாமலையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பீமானந்தல் புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி தீபா இவர் தனது விவசாய நிலத்தை மேம்படுத்திட தனது உறவினரிடம் கடன் கேட்டதை தொடர்ந்து தனது வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் 5 லட்சம் மற்றும் அவர் கணக்கில் இருப்பில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மொத்தம் ஐந்து லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை செங்கம் பகுதியிலே இயங்கும் பாரத வங்கியில் தரவு செய்துக்கொண்டு தனது இருசக்கர வாகன பெட்டியில் வைத்து எடுத்து வந்துள்ளார்.
வழியில் உள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்று டீ குடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்த போது வண்டியில் உள்ள பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள சிசிடிவி காட்சி களை ஆராய்ந்த போது மர்ம நபர் ஒருவர் லாலகமாக இருசக்கரவாகன பெட்டிலுள்ள பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பெண் விவசாயி தீபாசெங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் செங்கம் காவல் துறையினர் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பணத்தை எடுத்துச் சென்ற மர்ம நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. பட்டப் பகலிலேயே இது போன்ற திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..