ஓடும் ரயிலில் சகோதரனை கொலை செய்த சகோதரன்…
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் குடும்பத்தகராறு சகோதரனை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி. கொரியர் வேலை செய்து வந்த இவருக்கும், இவரது சகோதரர் ரவீந்திரன் என்பவருக்கும் குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் கொரியர் பணிக்காக சென்னை செல்லும் புறநகர் ரயிலில் முரளி ஏறியபோது, அவருடன் அதே வண்டியில் ஏறிய ரவீந்திரன் முரளியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த முரளி அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே பாதுகாப்புபடையினர், ரவீந்திரனையும் அவருடன் இருந்த மற்றொரு நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக ஓடும் ரயிலில் சகோதரனை கொலை செய்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.