கிளர்ச்சி வீரர் அழகு முத்துக்கோன்..! யார் இவர்..? தபால் தலையில் இவரின் புகைப்படம் இடம்பெற காரணம்..?
மாவீரன் அழகுமுத்து கோன் ( பிறப்பு ஜூலை 11, 1728 – இறப்பு 19 ஜூலை 1759) இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர், தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு இந்திய பாலிகர் ஆவார், அவர் பிரிட்டிஷ் இருப்புக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்.
கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன். இவர் ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக இருந்தார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல்வேறு இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.
1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போர்.
முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு ஜெனரல் மருதநாயகம் பிள்ளை (முகம்மது யூசுப் கானை) அனுப்பி வைத்தது. அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.
அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர்.
மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு மரணம் அடைந்தனர்.
எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஆண்டு தோறும் சூலை 1ம் நாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2012ம் ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்திய அரசின் சார்பில் மதுரையில் அழகுமுத்துக்கோன் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்தியா நாட்டு மக்களுக்குகாக போராடி தமிழ்நாட்டில் கிளர்ச்சியை மேற்கொண்ட அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவரை பற்றிய இந்த தொகுப்பை எழுதியதில் மதிமுகம் பெருமை கொள்ளும்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..