“விஷாலுக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு“ நடிகர் தனுஷ் மீது இதுவரை..! நடிகர் சங்கம் வெளியிட்ட அதிர்ச்சி..!
நடிகர் சங்கத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையிலான பிரச்சனை என்பது, தமிழ் சினிமாவில் தொன்றுத் தொட்டு நடந்து வருகிறது. இதனை சமாளிப்பதற்கு, இருதரப்பு நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், பிரச்சனை சுமூகமாக முடிந்ததே சரியானதே கிடையாது.
இருப்பினும், இந்த பிரச்சனைகள், சில நாட்கள் மட்டும் நீடித்துவிட்டு, பின்னர் மறைந்துவிடும். ஆனால், தற்போது இரண்டு சங்கங்களுக்கும் மத்தியில் நடக்கும் பிரச்சனையை பார்க்கும்போது, இது இப்போதைக்கு முடியும் என்று தோன்றவில்லை.
அதாவது, “தயாரிப்பாளர்களிடம் இருந்து முன்பணத்தை வாங்கிக் கொண்டு, கால்ஷீட் தராமல் சில நடிகர்கள் இழுத்தடிப்பதாகவும், அவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படுவதாகவும்” தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது. மேலும், நடிகர் தனுஷ், விஷால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு சங்கம் தரப்பில் வழங்கப்பட்டது.
இவர்களது இந்த நடவடிக்கை-க்கு பதில்மொழி வழங்கிய நடிகர் சங்கம், “நடிகர் தனுஷ் மீது இதுவரை எந்தவொரு புகாரும் எங்களுக்கு வரவில்லை. இவ்வாறு தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது” என்று கூறியிருந்தனர். இந்நிலையில், இவர்களது இந்த அறிக்கைக்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலடி கொடுத்துள்ளது.
அதாவது, “தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தனுஷ் மீது எந்த புகாரும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே தயாரிப்பாளர் சங்க பொதுகுழுவில் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் 5 நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது நடிகர் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் நடிகர் சங்கம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் சங்க உறுப்பினர்கள் நலன் காக்க நாங்களும் சில முடிவுகள் எடுக்க வேண்டியது வந்தது. நடிகர் சங்கம் தங்கள் உறுப்பினர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுப்பதை போலத்தான் எங்கள் உறுப்பினர்களின் நலன் காக்க ஏற்கனவே அறிவித்த நவ., 1 முதல் சினிமா ஸ்டிரைக் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளோம். இதற்கு நடிகர் சங்கம் தகுந்த ஒத்துழைப்பு தரும் என்ற நம்புகிறோம்”.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்