உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இமானுவேல் சேகரனார் அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பழைய நகராட்சி வளாகம் முன்பு அவரின் திருவுருவப்படத்திற்கு தேவேந்திர குல வேளாளர் சார்பாக காளிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கி அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி விழாவை கொண்டாடினர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வளர் மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதுவரையில் செப்டம்பர் மாத ஊதியம் வழங்கடாததால் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும், இனி வரும் காலங்களில் மாதத்தின் ஊதியம் இறுதி நாள் வேலை நாளில் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இதில் திரளானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் கீழமுக்கூட்டு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டின் உள்ளே பாம்பு ஒன்று மேஜை டிராயரில் பதுங்கியது. இதனை அறிந்த விஜயகுமார் உடனடியாக சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடி வீரர் சினேக் பாண்டியனுக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் சினேக் பாண்டியன் பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக நாள்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தொடர் மழையால் அவ்வப்போது மின் துண்டிப்பு ஏற்படுவதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பிராமணர் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பர்வத வர்தினி, சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில், நவராத்திரி பெருவிழாவின் ஆறாம் நாளான இன்று உற்சவருக்கு, ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 500,200,100,50, ஆகிய ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு, திரு ஊடல் வாத்தியங்கள் முழங்க உற்சவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தனலட்சுமி உற்சவரை வணங்கி சாமி தரிசனம் செய்தனர்.