இனி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பினால் இதுதான் தண்டனை..!! உச்சநீதிமன்றம் வெளியிட்ட முடிவு..!!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்த ஆங்கில தொலைக்காட்சி ஆசிரியர் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சனாதன தர்மம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து ஆங்கில தொலைக்காட்சியின் ஆலோசனை ஆசிரியர் அபிஜித் மஜும்தார் கட்டுரை எழுதியிருந்தார்.
அதில், உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக சென்னை சைபர் கிரைம் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அபிஜித் மஜும்தார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 8-ம் தேதி, சென்னை சைபர் கிரைம் காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.