திருப்பதி லட்டு சர்ச்சை..!! சிபிஐ கஸ்டடியில் 3 பேர்..!! பின்னணியில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!!
திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முன்னணியினர்..
புனித திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் உபயோகப்படுத்தபடும் நெய்யில்., மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்த நெய்யை உபயோகபடுத்தி இருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது..
இந்த கலப்படம் ஆனது… ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் நடத்தப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் ஆய்வகதிற்கு லட்டுவின் மாதிரி சாம்பிள்கள் கொண்டு செல்லப்பட்டு உறுதி செய்யப்பட்டது., ஆய்வின் முடிவில் மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதியானது.., அதன் பின் லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன், நெய் கலப்பட விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது எனக்கூறி இவ்வழக்கை சிபிஐ, மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவிற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தனர்.
இதுதொடர்பாக, ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தை சேர்ந்த, ராஜசேகரன், போலா பாபா நிறுவனத்தை சேர்ந்த பிபின் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி தலைமை அதிகாரி அபூர்வா வினய்காந்த் சவ்டா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், லட்டிற்காக சேர்க்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இதில் பலர் சம்மந்த்ப்படுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..