சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமான அளவு அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, (ஏப்ரல் 4) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 5,600 ரூபாயாகவும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 44,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 65 ரூபாய் அதிகரித்து 6,076 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 48,608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 70 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 80 காசுகளுக்கும், கிலோவிற்கு 700 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது தங்கத்தின் மீதான முதலீடுகள் குறையக் காரணமாக அமைந்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி காரணமாக விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.