திருமணத்திற்கு முன் பெண் செய்த செயல்..!! அதிர்ச்சியில் மாப்பிளை வீட்டார்..!
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அக்ராஹர தெருவை சேர்ந்த செல்வகுமார். இவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜோதிபிரியா வயது (22) தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் (பி.ஏ) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரும் மாட்லாம்பட்டியை சேர்ந்த துணி வியாபாரி செல்வகுமார் (24) என்ற வாலிபரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் ஜோதிபிரியா குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடன் ஜோதி பிரியாவிற்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி காலை மருதாணி வாங்க கடைக்கு செல்வதாக கூறி சென்ற ஜோதிபிரியா மீண்டும் வீடு திரும்பவில்லை நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு சென்ற மகள் திரும்பி வராததால் தந்தை செல்வகுமார் தோழிகள் வீடு உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஜோதி பிரியா தனது காதல் கணவர் செல்வகுமாருடன் காரிமங்கலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தவர் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்கவில்லை என்றும் காதலன் செல்வகுமாரை நேற்று மருதமலை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். ஆனால் மறுபக்கம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார், ஜோதிபிரியா வீட்டாரிடம் தகராறில் ஈடுப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– லோகேஸ்வரி.வெ