10 வருடங்களாக தலைமறைவாக இருந்த வனவிலங்கு வேட்டையர்கள் துப்பாக்கியுடன் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் காட்டெருமை, மான், முயல், காட்டுப்பன்றி, உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்த வனவிலங்குகளை சமூக விரோதிகள் அடிக்கடி வேட்டையாடி கள்ள சந்தையில் அவற்றின் இறைச்சியை விற்று வருகின்றனர்.
சாத்தனூர் வனச்சரகத்தை ஒட்டியுள்ள பென்னையாறு பிக்கப் டேம் வனப்பகுதியில் வனவிலங்குகளை, வேட்டையாட கள்ள துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று வருவதாக சாத்தனூர் வனத்துறை அதிகாரிகளுக்கு ஒரு சிலர் ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.
ரகசிய தகவலின் பெயரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர், பென்னையாறு பிக்கப் டேம் பகுதியில் சோதனையில் ஈடுபடுள்ளனர். அப்பொழுது துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் மலமஞ்சனூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவனது கூட்டாளி தானிப்பாடி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்ற வேட்டையர்கள் என தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக வனத் துறையினரிடம் சிக்காமல் தப்பித்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, வனவிலங்குகளை வேட்டையாடிய குற்றத்திற்காக இருவரையும் வனத்துறையினர், நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைத்தனர்.