தனியார் மருத்துவமனை மருத்துவரால் பெண் உயிரிழப்பு..!! பரபரப்பான திருப்பத்தூர்..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தெண்ணம்பட்டு, மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வேண்டாம்மாள் (42) இவருக்கு தைராய்டு நோய் உள்ள நிலையில் ஆம்பூர் உமர் சாலையில் உள்ள (எஸ்.என்.ஆர்) தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் .
இந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் பணியாற்றும் ராம்திலக் என்ற மருத்துவர் வேண்டாம்மாளுக்கு தைராய்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார், அறுவை சிகிச்சை முடிவுற்ற பின்னர் வேண்டம்மாளின் உடல் நிலை மோசமானதால், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேண்டாம்மாளை ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், ஆம்பூரில் வேண்டாம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு வேண்டாம்மாளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் வேண்டாம்மாளின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வேண்டாம்மாளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது வேண்டாம்மாளின் உறவினர்கள் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் , ஆம்பூர் நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..