நீ ராம நாமம் சொல்லு.. மஹாபெரியவா ஆன்மீக கதை-14
(பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்)
“யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன; தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம”
“(எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகாமௌளியான என் குருநாதரை நமஸ்கரிக்கிறேன்)
கட்டுரையாளர்-ஆர்.வீழிநாதன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
“பல வருஷங்களுக்கு முன்னேரே ,காஞ்சி மஹாபெரியவா ஸ்வாமிகள், மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த
ஆனந்த தாண்டவபுரத்தில் எழுந்தருளி காட்சி தந்தார் . அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பண்டிதர்
மஹானை தரிசிப்பதற்காக அங்கே சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்து,அதில் ராம நாமம்
எழுதிக் கொண்டு மாலையில் வரும்படி சொல்லியனுப்பினார் மஹான். அவர் கூறியது போல், மாலையில் அந்தச் சிறுவர்கள் ராம நாமம் எழுதிக்கொண்டு வந்து மஹா பெரியவரிடம் தந்தனர்.
அப்போது அங்கிருந்த சிறுவர்களில் ஒருவரை பார்த்து ராம நாமம் சொல் நான் கேட்கிறேன் என
பணித்தார் மஹான். பக்கத்தில் இருந்தவர்கள் தயங்கியவாறு, “அவனால் பேசமுடியாது ஸ்வாமி”என்றனர். அந்த சிறுவர்களை கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் பையனைப் பார்த்து,” ம்…நீ ராம நாமம் சொல்லு!” என்று கேட்டார் .
என்ன ஆச்சரியம்..! வாய் பேச முடியாத அந்தச் சிறுவன் முதலில் சற்று திணறினான், பின்பு கொஞ்ச கொஞ்சமாக தெளிவான உச்சரிப்பில் ராம நாமம் சொல்ல சொல்ல அவர் கேட்டார் ..
இதை நேரில் பார்த்து ஆச்சரியமாக அவன் பேசுவதை பண்டிதர் அனுபவித்து கேட்ட அவர் பின் ராமாயண உபன்யாசம் தொடங்கியபோது, பிரார்த்தனை ஸ்லோகமாக,
“எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகாமௌளியான என் குருநாதரை நமஸ்கரிக்கிறேன்” என்று பொருள்படும் வகையில்…
“யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன; தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;” என்று அந்த பண்டிதர் பாடினார்.