யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு..! நீதிபதி உத்தரவு..?
யூடியூப் சேனல்களுக்கு சில கட்டுப்பாடுகள் எந்த வித நடைமுறையும் கட்டுப்பாடும் இல்லை எனக் கூறி, சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் பார்த்திபன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது. யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதாகவும்.., யூடியூப் சேனல்களுக்கு என்று சில விதி முறைகளை, கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, யூடியூப் நிறுவனத்தையும், ஒன்றிய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என்று தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் ஒன்றிய அரசை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
-லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..